ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் முன்னறிவிப்பில்லா போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிஐடியூ, அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களை தேர்வு செய்யும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனையடுத்து சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர […]

தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை சாலியத் மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை ஆவார். 24 வயதான இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் மங்களூரில் […]

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் கடந்த 9 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்றார். மேலும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அவர் சந்தித்தார். அப்போது அங்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்த நிலையில் 9 நாள் வெளிநாட்டு […]

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை தீர்க்காமல் செங்கோல் வைக்கிறார்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஒரு சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். கடவுளுக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடியை அமர வைத்தால், இந்த பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை […]

அமிதாப் பச்சன் – பிரபாஸ் இணைந்து நடிக்கும் புராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து மணிரத்னம், எச்.வினோத் ஆகியோரின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் பாகுபலி பட நடிகரான பிரபாஸின் படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக அவரிடம் ரூ.150 வரை சம்பளம் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.  […]

டோக்கியோ மற்றும் சென்னை இடையே மீண்டும் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்நிலையில் முதலமைச்சர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் தமிழ்நாட்டில், நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, மிட்சுபிஷி, ஹிட்டாச்சி போன்ற பல ஜப்பானிய பெருநிறுவனங்கள் […]

வரும் ஜூன்-1ம் தேதி முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கரம் மற்றும் […]

அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 இடங்களில் இன்று 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை, திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. இதனை தொடர்ந்து மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் […]

சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை […]

தமிழ்நாடு அரசு திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (ஒளிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை), இளங்கலை – காட்சிக்கலை (ஒலிப்பதிவு), இளங்கலை காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்), இளங்கலை காட்சிக்கலை (படத்தொகுப்பு), […]