கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 (IX 415) விமானத்தின் என்ஜினில் எண்ணெய் அளவு திடீரென குறைந்ததை தொடர்ந்து, விமானம் பாதியிலேயே மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. வானில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் 1-வது என்ஜினில் உள்ள இன்ஜின் ஆயில் அளவு வெகுவாகக் குறைந்து வருவதை விமானப் பணியாளர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து முறையான விமானப் பாதுகாப்பு […]
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீராங்கனை கிராந்தி கவுட் மீது பாலியல் ரீதியான மற்றும் பாலினத் தாக்குதல் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘எக்ஸ்’ தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், பாகிஸ்தான் ரசிகர்களின் கூட்டத்திலிருந்து இந்திய வீராங்கனையின் பாலினம் மற்றும் தோற்றத்தைக் குறிவைத்து அவதூறான […]
உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பரவியுள்ள மர்ம காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் காரணமாக ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜியோலிகோட் (Jeolikote) மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் குடிநீர் மாசுபாடு காரணமாக இந்த நோய் பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த திடீர் சுகாதார அவசரநிலையை அடுத்து, அப்பகுதியில் மருத்துவ முகாம்கள் அமைத்தல், குடிநீரைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் மாற்று […]
புற்றுநோய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிகப்படியான சூரிய ஒளி தாக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவையே. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி அனைவராலும் எதிர்கொள்ளப்படும், எவராலும் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய ஆபத்து காரணி உள்ளது. அதுதான் வயது முதிர்வு. புற்றுநோய் எந்த வயதினரையும் தாக்கலாம் என்றாலும், வயதாக ஆக பெரும்பான்மையான புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதுவே புற்றுநோய்க்கான மிக முக்கியமான […]
3 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்போது காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். முதல்வர் பேச ஆரம்பித்தது முதலே எதிர்க்கட்சிகள் இருக்கையில் எழுந்து கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டது. இருப்பினும் முதல்வர் ஆக்ரோசத்துடன் திமுகவை தாக்கி முதல்வர் பேசினார். அவர், பேசியதாவது, பேச்சுரிமை என்பது பெண்களைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்கோ அல்லது இரட்டை அர்த்தத்தில் பேசுவதற்கோ பயன்படுத்தப்படக் கூடாது […]
சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியில், பிரபல குத்துச்சண்டை வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான மேரி கோம் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு தாயாகவும், பெண்ணாகவும் தனது உண்மையான இயல்பு வெளிப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் அனைவருக்கும் ஒழுக்கத்தைக் கொண்டுவரப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 20 புதிய உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. தொலைக்காட்சி நடிகர்கள், சமூக […]
இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்து பாரிய மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட திடீர் தாக்குதலைப் போன்றே இது இருக்கும் என்றாலும், தொடக்கத்திலிருந்தே மிகத் துல்லியமான ஒருங்கிணைப்புடன் இது திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, ஈரானின் நேரடி ராணுவ வலிமையுடன் லெபனானைச் சேர்ந்த […]
கேப் வெர்டே (Cape Verde) நாட்டின் ஃபோகோ (Fogo) தீவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த நெஞ்சை உலுக்கும் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 9:00 மணியளவில் காம்பனாஸ் டி சிமா (Campanas de Cima) சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சா தாஸ் கால்டெராஸ் […]
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை தனியார்மயமாக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் “அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” எனத் தெரிவித்துள்ள இஸ்ரோ, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இது குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ள இஸ்ரோ, விண்வெளித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு இஸ்ரோவின் பங்கை குறைப்பதற்காக அல்ல […]
டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி தெற்கு வளாக காவல் நிலையத்தில் ஆண்கள் தங்கும் விடுதியின் உரிமையாளர் ஹரிராம் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு […]

