கோவை மாவட்டம் சூலூரை அடுத்த சித்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 24 வயதான சந்தோஷ், சூலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு முன்பு இவருக்கும், தேவி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஜாதகம் பொருந்தாத காரணத்தினால், இருவரின் வீட்டாரும் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். தேவி கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரைத் திருமணம் செய்துகொண்டு […]

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமன்றி, ஒரு முக்கியமான முதலீடாகவும், சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ரொக்கமாகப் பணம் கொடுத்துத் தங்கம் வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர். இருப்பினும், தங்கப் பரிமாற்றங்களில் நடைபெறும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மத்திய அரசு அவ்வப்போது கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒரு நபரால் ரொக்கமாக எவ்வளவு […]

தூத்துக்குடி மாவட்டம், தாமரை மொழிப் பகுதியில் முன்விரோதம் காரணமாக உறவினரைக் கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் ஒருவரை, பழிவாங்கும் நோக்கில் ஒரு கும்பல் சினிமா பாணியில் காரை மோதி வீழ்த்தி, சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ தாமரை மொழிப் பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் (34) என்பவர், தனது உறவினரான கந்தையா (48) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை […]

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பெரும்பாலான பயனர்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மாறி வருகின்றனர். எனினும், ஒரு நாளைக்கு 2 ஜிபிக்கும் குறைவாக தினசரி டேட்டா வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோ நிறுவனம் தற்போது ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.601 செலுத்தி, ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் […]

வேலைக்குச் செல்லும் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைவருக்கும் சமையல் வேலையைக் குறைக்கும் நண்பன் என்றால் அது இட்லி, தோசை மாவுதான். வார இறுதி நாட்களில் 5 நாட்களுக்கான மாவை அரைத்து ஃபிரிட்ஜில் சேமித்து வைப்பது பல வீடுகளில் வழக்கமான ஒன்றாகும். சில சமயங்களில், வானிலையில் ஏற்படும் மாற்றம், மாவை அரைக்கும் பக்குவம் அல்லது ஃபிரிட்ஜ்ஜில் ஏற்படும் சிறு பழுதுகள் காரணமாக மாவு எதிர்பாராத விதமாக அதிகமாக புளித்துப்போக […]

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகிகளைத் தயார் செய்யும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று (அக்.11) அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில், பூத் ஏஜெண்டுகளுக்கான பிரம்மாண்ட […]

அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனுப்பியுள்ள சுவாரஸ்யமான மின்னஞ்சல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்றாலும், […]

பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு, செல்போன் செயலி மூலம் தெரியாத நபர்களைத் தேடிச் சென்ற வாலிபர் ஒருவர், திருநங்கையின் மிரட்டலுக்கு உள்ளாகி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை இழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உதயகுமார் என்பவர், சென்னை கொரட்டூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், சமூக வலைதளம் மூலம் பெண்களை தேடியுள்ளார். அப்போது, ஒரு செல்போன் செயலி மூலம் […]