தினமும் ஆயிரம் வேலைகளில் பரபரப்பாக ஓடி கொண்டிருகக்கும் நிலையில் காலை உணவை சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உண்டாகிறது. இவ்வாறு ஏற்படும் அல்சரை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
தேவையான பொருட்கள்: ஒரு சோற்றுக்கற்றாழையை முழுவதுமாக எடுத்து அதன் மேலிருக்கும் தோலை செத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் இருக்கும் வெண்மை நிற ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து பாத்திரத்தில் கொள்ள வேண்டும். மேலும் அதனை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து கற்றாழையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி காலை நேரத்தில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். இல்லாவிட்டால் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மோரில் கலந்தும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து குடித்து வந்தால் போதும் அல்சர் வந்த இடம் தெரியாமல் முழுவதுமாக குணமாகி விடும். இதனுடன் உடம்பில் உள்ள சூடு முற்றிலும் தணிந்து விடும் மற்றும் முடி வளர்தல், குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் நீங்கும்.