’கூட்டணியில் சேர பாஜக மிரட்டியது’..!! ’வங்கிக் கணக்குகளை முடக்கியது’..!! பிரேமலதா விஜயகாந்த் நெத்தி அடி..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களை கவரும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி சேர மிரட்டல் வந்ததாகவும், தேமுதிகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

முன்னதாக தொகுதி பங்கீட்டின் போது, பாஜக உடன் தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், தொண்டர்களின் விருப்பப்படி கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : Good News | ‘இது இருந்தால்போதும்’..!! தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!

Chella

Next Post

'இது புதுசா இருக்குன்னே’..!! தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவு..!! புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு..!!

Thu Apr 4 , 2024
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புரட்சி பாரதம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. புரட்சி பாரதம் கட்சி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் […]

You May Like