நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதத்திற்கு இணையான உயர்ந்த அந்தஸ்தை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் அமளிக்கு மத்தியிலும், ஆளுங்கட்சியின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய மசோதாவின்படி, ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை அவமதிக்கும் வகையிலோ அல்லது அதற்கு மரியாதை செலுத்தத் தவறும் வகையிலோ செயல்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் கடுமையான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ள இந்த மசோதா, அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் இதில் கையெழுத்திட்டவுடன், இது அதிகாரப்பூர்வ சட்டமாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : மக்கள் தூக்கி எறிந்தும் திருந்தலையா..? திமுகவை வெளுத்து வாங்கிய தவெக..!! பரபரப்பு அறிக்கை..!!



