fbpx

#கர்நாடகா : 250 மணப்பெண்களுக்கு 14000 மணமகன்கள் திரண்ட திருமண வரன்..!

இந்த காலகட்டத்தில் பல இடங்களில் மணமகன்கள் மணப்பெண்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அதனை நிரூபிக்கும் வகையில் இந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் கூட்டம் நிரம்பிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

கர்நாடக மாநில பகுதியில் உள்ள மண்டியா என்கிற மாவட்டத்தில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ‘ஒக்கலிகா மணமக்கள் மாநாடு’ என்கிற பெயரில் சென்ற ஞாயிறு கிழமை அன்று நடைபெற்றது. 

இந்த நிலையில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் சுமார் 14,000 ஆண்கள் அவர்களின் ஜாதகத்துடன் பதிவு செய்துள்ளனர். இதில் பெண்கள் திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெறுதற்கு 250 பதிவுகள் மட்டுமே செய்திருந்தனர்.

மணமகன்கள் கடலாக திரண்ட செயல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Rupa

Next Post

#வானிலை : பாடல் வரிகள் மூலமா வானிலை பற்றி வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்.. குவியும் லைக்..!

Wed Nov 16 , 2022
இணைய தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு பற்றி ஒரு அப்டேட் கூறியுள்ளார். அந்த பதிவில் ”அடுத்த 3-4 நாட்கள் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பனிப்பொழிவு இருக்கும் என்றும். இவை தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் பனிதொடர்பான செய்தியை பாடல் வரிகளாக  ”பனிவிழும் மலர்வனம்  உன் பார்வை ஒரு வரம்,  பனிவிழும் மலர்வனம்  உன் பார்வை ஒரு […]

You May Like