fbpx

கவனம்…! பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களுக்கு… 14-ம் தேதி சிறப்பு குறைதீர் முகாம்…! தமிழக அரசு அறிவிப்பு…!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களுக்கு 14-ம் தேதி சென்னையில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.10.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

செங்கல்பட்டில் இரவு நேரத்தில் கேட்ட துப்பாக்கி சத்தம்..! தப்பி செல்ல முயன்ற ரவுடி துப்பாக்கியில் சுட்டு பிடிப்பு..!

Thu Oct 12 , 2023
செங்கல்பட்டு அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி தனிகாவை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். திருவள்ளுரை சேர்ந்தவர் ரவுடி தனிகா. இவர் மீது திருவள்ளூர் மட்டும் செங்கல்பட்டு காவல் நிலையங்களில் கொலை கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. வழிப்பறி வழக்கில் சிக்கிய அவர்மீது விசாரணை தொடர்ந்து வந்தது. இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்து அழைத்து வர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. […]

You May Like