fbpx

“போதும்….. இனிமேல் இந்த சித்திரவதைய…..” தொடர் பாலியல் தொல்லை! 18 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை!

திருவள்ளூர் அருகே சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மனமுடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் அருகேயுள்ள பகுதியைச் சார்ந்த 18 வயது சிறுமி ஒருவர் 4 நபரால் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறார். அவர்களது நடவடிக்கைகள் எல்லை கடந்து கொடூரமாக செல்லவே மனமுடைந்த சிறுமி தனது வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

தீயினால் படுகாயமடைந்த சிறுமியை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே அந்த 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. பாலியல் தொல்லையினால் சிறுமிகளும் குழந்தைகளும் கொல்லப்படுவதும் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களிடமும் பெண் குழந்தைகளிடமும் ஒரு வித பய உணர்வை ஏற்படுத்துகிறது.

Rupa

Next Post

"ஒட்டு துணியில்லாமல் தர தரவென்று....." கோவை பெண்ணுக்கு கணவர், மாமனார், மாமியார் செய்த கொடுமை!

Fri Mar 3 , 2023
கோவையைச் சார்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் தனது கணவரும் மாமனாரும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்திருக்கிறார். கோவை மாவட்டத்தைச் சார்ந்த 25 வயதுடைய இளம் பெண், பிடெக் பட்டதாரியான இவரை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணுக்கும், சொந்தமாக தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வரும் கோவையைச் […]

You May Like