தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிறது.
அதனை செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்து கொண்டு, பல வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுகிறார்கள்.
அந்த வகையில், இன்று இந்திய தபால் துறையில் காலியாக இருக்கின்ற சுமார் 3,167 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில், தபால் துறையில் ஏற்கனவே 12,828 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், மீண்டும் 30,041 ஜி டி எஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 3,167 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கான விண்ணப்பதிவு தற்சமயம் தொடங்கி இருக்கின்ற நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 23ஆம் தேதி வரையில் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு indiapost.gov.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.