fbpx

தபால் துறையில் காத்திருக்கும் 3167 காலி பணியிடங்கள்……! உடனே விண்ணப்பியுங்கள்……!

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிறது.

அதனை செய்தித்தாள்கள் மூலமாக தெரிந்து கொண்டு, பல வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுகிறார்கள்.

அந்த வகையில், இன்று இந்திய தபால் துறையில் காலியாக இருக்கின்ற சுமார் 3,167 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில், தபால் துறையில் ஏற்கனவே 12,828 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், மீண்டும் 30,041 ஜி டி எஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 3,167 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதற்கான விண்ணப்பதிவு தற்சமயம் தொடங்கி இருக்கின்ற நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 23ஆம் தேதி வரையில் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு indiapost.gov.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Next Post

’ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க உதவும் மின்னஞ்சல்’..!! வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்..!!

Fri Aug 4 , 2023
உலகின் மிகவும் பாதுகாப்பான மெசேஜ் செயலிகளுள் வாட்ஸ் அப்பும் ஒன்று. எனினும், ஹாக்கர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் வாட்ஸ் அப் செயலியும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இணைய உலகில் இருக்கும் ஹாக்கர்கள் வெவ்வேறு தொழில்நுட்ப உதவிகளுடன் மக்களின் பல்வேறு சமூக வலைத்தள அக்கவுண்ட்களைக் கைப்பற்றும் வேலையைச் செய்து வருகின்றனர்.  ஃபிஷிங் தாக்குதல் என்று அழைக்கப்படும் இணையத் தாக்குதல் மூலமாக, உங்கள் சான்றுகளோடு உங்கள் அக்கவுண்டைக் கைப்பற்று விடுகின்றனர். உங்களுக்கு நெருக்கமான […]

You May Like