fbpx

அதிர்ச்சி சம்பவம்: பலாத்கார முயற்சியில் ’65’ வயது மூதாட்டி படுகொலை..!! கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.!

தென்காசி அருகே 65 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் 72 வயது முதியவரை கைது செய்துள்ளனர். தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முப்புடாதி(65). கணவரை இழந்த இவர் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் தனது வீட்டின் அருகே ஆடைகள் இன்றி சடலமாக மீட்கப்பட்டார் மூதாட்டி. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினார்.

காவல்துறையின் விசாரணையை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 72 வயது நபரை பிடித்து விசாரித்ததில் முப்புடாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனிமையில் இருந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Next Post

'வாட்ஸ்அப்' ல் இனி அப்டேட் பண்ண தேவை இல்லையா.? புதிய வசதியை அறிமுகம் செய்த மெட்டா.! விபரங்கள் என்ன.?

Sun Feb 4 , 2024
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, தனிநபர் கணக்குகள் மற்றும் சேனல்களுக்கான, மாதாந்திர அறிக்கையை சுயமாக உருவாக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாதாந்திர ரிப்போர்ட்டை நாம் ஒருமுறை இயக்கினால் ஒவ்வொரு மாதமும் சுயமாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் மற்றும் சேனல்களின் தகவல்களை வணங்கும் வகையில் இந்த புதிய வசதி வடிவமைக்கப்பட்டிருக்கிறது . தற்போது இந்த சேவையை ‘WABetaInfo’ கண்டறிந்துள்ளது. இந்த புதிய வசதியின்படி, ஒவ்வொரு மாதமும் வாட்ஸ் அப் கணக்கு […]

You May Like