fbpx

#திருப்பத்தூர்: 8 வயது சிறுவன் பேருந்து மோதி பலி.. இளைஞர்களின் வெறி செயல்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – பானுமதி தம்பதிக்கு தரணி என்ற 8 வயதில் மகன் உள்ளார். தரணி தற்போது விடுமுறைக்காக தனது பாட்டியை பார்க்க வந்துள்ளார்.

தரணி மற்றும் அவரது தாய் பானுமதி மற்றும் அவரது பாட்டி ஆகியோர் புதன்கிழமை தங்கள் கிராமத்திற்குத் திரும்புவதற்காக களந்திர கிராமத்தை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றனர்.

அவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது, ​​தரணி நடு மீடியனைக் கடந்தபோது, ​​திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த தனியார் பேருந்து, அதிவேகமாகச் சென்ற சிறுவன் தரணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் தரணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், டவுன் பகுதி என்பதை அறிந்து அதிவேகமாக பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை அந்த ஊரை சேர்ந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் பஸ் கண்ணாடிகளை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், காயமடைந்த பேருந்து ஓட்டுநரை அப்பகுதி மக்களிடம் இருந்து மீட்டனர். இதையடுத்து, விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

’வாரிசு’ படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..!! படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Thu Jan 5 , 2023
நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்து உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அதே போல பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என […]

You May Like