கடலூர் அருகே 16 வயது மைனர் சிறுமி ஒருவர் காணாமல் போன வழக்கில், அவருடைய காதலன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கடலூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது மாணவி, தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் விஜயராமன் என்ற இளைஞருக்கும், அந்த 16 வயது மாணவிக்கும், பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், இருவரும், ஒருவரை ,ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்னர், இரவு நேரத்தில் அந்த 16 வயது சிறுமி வெளியே சென்று வருவதாக தெரிவித்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால், அதன் பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. வெகு நேரம் ஆகியும், மகள் வீடு திரும்பாததால், பெற்றோர் பதற்றம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
ஆகவே, இந்த சம்பவம் குறித்து, புதுப்பேட்டை காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் வழங்கியிருக்கிறார்கள். இந்த புகாரை அடிப்படையாக வைத்துக் கொண்டு, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தொடங்கினர்.
காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையின் மூலமாக, அந்த 16 வயது சிறுமி, தன்னுடைய காதலனுடன் தான் சென்றார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, விஜயராமனை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர், அவரை கைது செய்ததோடு, அவருடன் இருந்த அந்த 16 வயது சிறுமியையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.