திருச்சியில் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாநகரைச் சார்ந்தவர் சுரேஷ். பைனான்ஸியரான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவரது மகளுடன் படிக்கும் தோழி ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாக தெரிகிறது. அந்த மாணவியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த சுரேஷ் தனது மகளின் தோழியை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டதை தொடர்ந்து இச்சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகாரை விசாரித்த காவல்துறை சுரேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து இருக்கிறது. மேலும் அவர்களிடம் தீவிரமான விசாரணையில் இறங்கி இருக்கிறது காவல்துறை. தனது மகளின் தோழியையும் தனது மகளாக பார்க்காமல் அந்தப் பெண் மீது வக்கிரம் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் மேலும் பெற்றோரிடம் அதிகமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றன. இது போன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பொதுமக்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.