திருச்சியைச் சார்ந்த நபரின் மனைவி கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். கொசுவை விரட்ட கொசுவர்த்தியை பற்ற வைத்த போது தீ உடம்பில் பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. திருச்சி நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தார் அந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் புருஷோத்தமன் அவர்களது நினைவாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்.
இதனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். திருச்சி பகுதியில் நிலவும் கடுமையான கொசு தொல்லையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள கொசுவர்த்தியை பற்ற வைத்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக நெருப்பு அவரது ஆடையில் பற்றிருக்கிறது. ஆடையில் பற்றிய நெருப்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் எங்கும் வேகமாக பரவியது. அவனது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர் விஜய் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.