fbpx

கஞ்சா போதையில் ஆண் நண்பர்களுடன் உல்லாசம்….! தட்டி கேட்ட பொதுமக்கள் மீது பாய்ந்த இளம் பெண்….!

கன்னியாகுமரி அருகே ஆண் நண்பர்களுடன் கஞ்சா போதையில் உல்லாசமாக இருந்த இளம் பெண்ணை பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுடன் அந்த இளம் பெண் மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய ஆண் நண்பர்களுடன், ஆள் அரவம் இல்லாத கடலோர பகுதிக்கு சென்று, தனிமையில் இருந்ததாக தெரிகிறது.

இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், அந்த கும்பலை சுற்றி, வளைத்து பிடித்தனர். அப்போது, அந்த இளம் பெண் உட்பட எல்லோருமே கஞ்சா போதையில் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. ஆகவே அவர்களை தட்டி கேட்ட பொதுமக்களிடம் அந்த இளைஞர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்களுடன் சேர்ந்து, கஞ்சா போதையில் இருந்த இளம் பெண் ஒருவரும், பொதுமக்களிடம் மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் எல்லாவற்றையும் சுற்றி இருந்த சிலர் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர்.

சுற்றி இருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த அவர்கள் வீடியோ எடுக்கும் நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து, தப்பி ஓட முயற்சி செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Post

Thalapathy Vijay | விஜய்யை வைத்து மீண்டும் படம் இயக்கும் நெல்சன்..? விரைவில் வெளியாகும் அறிவிப்பு..?

Sat Aug 12 , 2023
நடிகர் விஜய்யுடன் மீண்டும் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன் என இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளிலும் இப்படம் வெளியானது. 24 ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், யூடியூப் […]

You May Like