கன்னியாகுமரி அருகே ஆண் நண்பர்களுடன் கஞ்சா போதையில் உல்லாசமாக இருந்த இளம் பெண்ணை பொதுமக்கள் தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுடன் அந்த இளம் பெண் மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய ஆண் நண்பர்களுடன், ஆள் அரவம் இல்லாத கடலோர பகுதிக்கு சென்று, தனிமையில் இருந்ததாக தெரிகிறது.
இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், அந்த கும்பலை சுற்றி, வளைத்து பிடித்தனர். அப்போது, அந்த இளம் பெண் உட்பட எல்லோருமே கஞ்சா போதையில் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. ஆகவே அவர்களை தட்டி கேட்ட பொதுமக்களிடம் அந்த இளைஞர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்களுடன் சேர்ந்து, கஞ்சா போதையில் இருந்த இளம் பெண் ஒருவரும், பொதுமக்களிடம் மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் எல்லாவற்றையும் சுற்றி இருந்த சிலர் செல்போனில் படம் பிடிக்க தொடங்கினர்.
சுற்றி இருந்தவர்கள் படம் பிடிப்பதை பார்த்த அவர்கள் வீடியோ எடுக்கும் நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து, தப்பி ஓட முயற்சி செய்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.