fbpx

தாய் கள்ளக்காதலை முறித்துக் கொண்டதால்.. 7 வயது மகனை கொலை செய்த கொடூரம்..!

மும்பை மாநில பகுதியில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது மகனை பல இடங்களில் தேடியுள்ளனர். 

சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை கடத்திவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறுவனை தேடி சென்றனர். 

இந்த நிலையில், அச்சிறுவனின் வீட்டிற்கு அருகே இருக்கும் நீச்சல் குளத்தில் சிறுவனின் உடல் மிதப்பதாக போலிசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் நிதின் கம்ப்ளே. இவர் பள்ளியிலிருந்து சிறுவனை தினமும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவனை அழைத்து வந்த நிதின் நீச்சல் குளத்தில் சிறுவனை மூழ்கடித்து கொலை செய்து உள்ளார்.

இதனையடுத்து காவலாளியை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவனின் தாய்க்கும் காவலாளி நிதின் காம்ப்ளே என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறினால் கள்ள உறவை முறித்துக் கொண்டார் சிறுவனின் தாய்.

இதனால் ஆத்திரமடைந்த நிதின் அந்த பெண்ணை பழி வாங்க நினைத்து அவரின் 7 வயது மகனை அழைத்து வந்து நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Baskar

Next Post

நாய்கள் ஜாக்கிரதை.. நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் கட்டையால் பெண் அடித்து கொலை செயல்பட்ட சம்பவம்..!

Thu Jan 12 , 2023
உத்தர பிரதேச மாநில பகுதியில் உள்ள கிஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால் முனியா(50) எனபவர். இவரின் பக்கத்து வீட்டில் செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டு நாயானது இவரை பார்த்து குரைத்துள்ளது. அதன் பின்னர் அவரை கடித்துள்ளது. இதன் காரணமாக நாயின் உரிமையாளரிடம் முனியா வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதமானது இரு குடும்பத்திற்கும் […]
தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்ட பச்சிளம் குழந்தை..!! கடித்துக் குதறியதால் பரபரப்பு..!! கேரளாவில் அதிர்ச்சி..!!

You May Like