மும்பை மாநில பகுதியில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யானை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது மகனை பல இடங்களில் தேடியுள்ளனர்.
சிறுவன் எங்கும் கிடைக்காததால் தங்கள் மகனை கடத்திவிட்டார்கள் என்ற சந்தேகத்தில் கடக்பாடா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறுவனை தேடி சென்றனர்.
இந்த நிலையில், அச்சிறுவனின் வீட்டிற்கு அருகே இருக்கும் நீச்சல் குளத்தில் சிறுவனின் உடல் மிதப்பதாக போலிசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் நிதின் கம்ப்ளே. இவர் பள்ளியிலிருந்து சிறுவனை தினமும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவனை அழைத்து வந்த நிதின் நீச்சல் குளத்தில் சிறுவனை மூழ்கடித்து கொலை செய்து உள்ளார்.
இதனையடுத்து காவலாளியை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவனின் தாய்க்கும் காவலாளி நிதின் காம்ப்ளே என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறினால் கள்ள உறவை முறித்துக் கொண்டார் சிறுவனின் தாய்.
இதனால் ஆத்திரமடைந்த நிதின் அந்த பெண்ணை பழி வாங்க நினைத்து அவரின் 7 வயது மகனை அழைத்து வந்து நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.