fbpx

பரபரப்பு…! கடலூரில் அதிமுக மாவட்ட நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை…!

கடலூரில் அதிமுக மாவட்ட நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் வண்டிப்பாளையத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகி புஷ்பநாதன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்றவரை வழிமறித்து ஓட.. ஓட மர்ம கும்பல் வெட்டி கொன்றுவட்டு தப்பி சென்றனர். இந்த படுகொலைக்கு முன்விரோதம் காரணமா…? அல்லது வேறு ஏதாவது காரணமாக என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் அதிமுக பிரமுகர் கொலை:

சென்னை அருகே உள்ள செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகப் பதவி வகித்து வந்தார். மேலும், இவர் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பார்த்திபன் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள அங்காள பரமேஸ்வரி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளனர்.

மேலும், அவர்கள் கொண்டு வந்த அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு பார்த்திபனை வெட்ட முயற்சித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பார்த்திபன் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். மர்ம கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று சுற்றி வளைத்து, கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று எதிர் கட்சிகள் சட்டமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary

AIADMK district executive hacked to death by mysterious persons in Cuddalore

Vignesh

Next Post

புதிய ராணுவ தளபதி!. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி இன்று பதவியேற்பு!

Sun Jun 30 , 2024
New army commander! Lieutenant General Upendra Dwivedi sworn in today!

You May Like