முன் விரோதம் மற்றும் பலிக்கு பலியாக கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஓசூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கியிருக்கிறது.
ராமச்சந்திரம் என்ற கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளியில் வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் கிடைக்க பெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி கிருஷ்ணப்பா( வயது 55) கிராமத்தில் தெருக்கூத்து பார்ப்பதற்காக சென்றிருந்தார். விவசாயி கிருஷ்ணப்பாவுக்கும் அந்தப் பகுதியில் இருந்த ஒரு சில நபர்களுக்கும் சில விஷயங்கள் தொடர்பாக முன்விரோதம் இருந்திருக்கிறது. இது தொடர்பாக அடிக்கடி சிறு சிறு வாக்குவாதங்களும் கைகலப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்த முன் விரோதம் முற்றிப்போய் தற்போது இந்த சம்பவம் கொலையில் முடிந்திருக்கிறது. அவரது எதிரிகள் திட்டமிட்டு தெருக்கூத்து பார்த்துவிட்டு வரும்போது அவரை வெட்டி கொலை செய்துவிட்டு அந்த உடலை வயக்காட்டில் வீசிவிட்டு தப்பி ஓடி விட்டனர் . இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகிறது.