fbpx

மாஸ்… 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம்…! வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ…

சேலம்‌ மாவட்டத்தில்‌ பெண்‌ குழந்தைகளின்‌ சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றிய 18 வயதிற்குட்பட்ட பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறை மூலம்‌ பெண்‌ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத்‌ தடுக்கவும்‌, அனைத்து பெண்‌ குழந்தைகளும்‌ 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ முறையை ஒழிக்கவும்‌, பெண்‌ குழந்தை திருமணங்களைத்‌ தடுக்கவும்‌, பாடுபட்டு வீர தீர செயல்‌ ரிந்துவரும்‌ 18 வயதிற்குட்பட்ட (31 டிசம்பர்‌ 2021-ன்‌ படி) பெண்‌ குழந்தைகளை சிறப்பிக்கும்‌ முகமாக ஐனவரி 24 தேசிய பெண்‌ குழந்தை தினத்தன்று மாநில விருது பெற தகுதியான பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ 25.11.2022 வரை வரவேற்கப்படுகின்றன.

குறிப்பாக, பிற பெண்‌ குழந்தைகளின்‌ கல்விக்கு உதவுதல்‌, பெண்‌ குழந்தை தொழிலாளர்‌ ஒழிப்பு, பெண்‌ குழந்தை திருமணத்தை தடுத்தல்‌ மற்றும்‌ தவிர்த்தல்‌, வேறு ஏதாவது வகையில்‌ சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல்‌, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள்‌, மூட நம்பிக்கைகள்‌ ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள்‌, கவிதைகள்‌ மற்றும்‌ கட்டுரைகள்‌ மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல்‌ மற்றும்‌ ஆண்கள்‌ மட்டும்‌ சாதிக்க முடியும்‌ என்பது போன்ற செயல்களை பெண்களாலும்‌ சாதிக்க முடியும்‌ என்று சாதித்திருத்தல்‌ போன்றவற்றில்‌ வீர தீர செயல்‌ புரிந்து, 31.12.2021-ன்படி 5 முதல்‌ 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில்‌ வசிக்கும்‌ பெண்‌ குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது குழந்தையின்‌ பெயர்‌, தாய்‌ / தந்‌தை முகவரி, ஆதார்‌ எண்‌, புகைப்படம்‌ ஆகியவற்றுடன்‌ குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல்‌ மற்றும்‌ சாதனைகள்‌ ஆகியவற்றின்‌ ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும்‌ அதற்கான ஆதாரங்கள்‌ இணைக்கப்பட வேண்டும்‌. மாநிலத்தில்‌ ஒவ்வொரு வருடமும்‌ மேற்கண்ட அம்சங்களில்‌ சிறந்து விளங்கும்‌ ஒரு பெண்‌ குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம்‌ மற்றும்‌ ரூ.1,00,000-க்கான காசோலை வழங்கப்படும்‌. மேற்காணும்‌ ஆவணங்களுடன்‌ விண்ணப்பங்கள்‌ சேலம்‌ மாவட்ட சமூக நல அலுவலகத்தில்‌ 25.11.2022-க்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

சூப்பர் நியூஸ்... ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கை...! 30 நாளில் நடவடிக்கை...! தமிழக அரசு உத்தரவு...!

Sat Oct 1 , 2022
ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம் ‌‌. மாத ஊதியதாரர்கள் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களையும் மிகவும் அச்சுறுத்தும் செலவுகளில் ஒன்று மருத்துவச்செலவு. எதிர்பாராமல் சில லட்சங்கள் வரை மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டிய சூழலில் வருகிறது. அது போன்ற நேரங்களில் மருத்துவ காப்பீடுகள் கை கொடுக்கின்றன. அதற்காகவே பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பாய் கருதி, மருத்துவ காப்பீடு […]

You May Like