fbpx

காதலித்த பெண்ணை 51 முறை ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொன்ற கொடூர காதலன்..!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பம்ப் ஹவுஸ் காலனியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து நடத்துநரால் ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார்.

கொலையாளி பஸ் கண்டக்டர் பணிபுரிந்த பேருந்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் பயணம் செய்ததாகவும், நடத்துனருக்கும் இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அந்த பெண் நடத்துனருடன் தொடர்பை துண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை ஆத்திரமடைந்து ஸ்க்ரூடிரைவரால் 51 முறை குத்தியுள்ளார் பஸ் டிரைவர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இளம்பெண் உயிரிழந்தார். பின்னர் கொலையாளி தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், இளம்பெண்ணின் சகோதரர் இதனை பார்த்து, குற்றத்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கொலையாளியை தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

பைக்கில் சென்ற இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..! 

Wed Dec 28 , 2022
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்றவர் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தலையில் வெட்டி கையோடு எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வனப்பகுதியில் தலையில்லாத உடல் இருப்பதையும், அருகில் மோட்டார் சைக்கிள் இருப்பதையும் பார்த்தனர். இது […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like