fbpx

#சென்னை: அண்ணியுடன் அந்தரங்கமாக இருந்த நபரை அடித்து கொலை செய்த கொழுந்தன்..! 

சென்னை மாநகர பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் தொழிலாளியான மணிகண்டன் (40) எனபவர் வசித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் வழக்கம் போல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அச்சமயத்தில், ​​கணவரின் தம்பியான வேலு திடீரென அங்கு சென்றுள்ளார். அப்போது அண்ணி மணிகண்டனுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். அண்ணன் இல்லாமல் இங்கே என்ன செய்கிறாய் என்று கேட்டு மணிகண்டனை பலமாக அடித்து தாக்கியுள்ளார். 

மணிகண்டன் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து மணிகண்டன் மனைவியான லதா, இது பற்றி வண்ணாரப்பேட்டை பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொலையை பதிவு செய்த காவல்துறையினர் வேலுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 

Baskar

Next Post

திருமணத்திற்கு சிலமணி நேரத்திற்கு முன்பு உயிரிழந்த மணப்பெண்.. காரணம் இதுதானா..!

Fri Jan 13 , 2023
லண்டன் நாட்டை சேர்ந்த நடியா ஜோசப் கோசின் என்ற இளம்பெண் தனது திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னராக தூக்கத்திலேயே இறந்துள்ளார். நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.  இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த சில மணி நேரத்திற்கு முன்னர் நடியாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்தது. மணமகளின் மரணத்திற்கு காரணம் கல்லீரல் செயலிப்பு என்று பிறகு தான் தெரியவந்துள்ளது.  […]

You May Like