fbpx

’அப்பாவ எழுப்பாதீங்க’..!! இரவு முழுவதும் கணவர் சடலத்துடன் மனைவி செய்த காரியம்..!! விடிந்து பார்த்தால் அதிர்ச்சி..!!

குடிபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்து சடலத்தின் அருகே இரவு முழுவதும் தூங்கிய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்றும் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மனைவி அன்னு கல்லைக் கொண்டு கணவர் அதுலை பலமாக தாக்கியுள்ளார். அவர் மயங்கி விழுந்ததும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், இரவு முழுவதும் கணவரின் சடலம் அருகே படுத்து உறங்கியுள்ளார்.

’அப்பாவ எழுப்பாதீங்க’..!! இரவு முழுவதும் கணவர் சடலத்துடன் மனைவி செய்த காரியம்..!! விடிந்து பார்த்தால் அதிர்ச்சி..!!

மறுநாள் காலையில் குழந்தைகளிடம் தந்தையை எழுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டு, வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பியதும் இரவு உணவை தயாரித்த அன்னு, குழந்தைகள் தூங்கியதும் அதுலின் உடலை இழுத்துச் சென்று வீட்டு வாசலில் போட்டுவிட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் கத்தி கூச்சலிட்டு, தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்துவிட்டார் என நாடகமாடியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதுலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மனைவி அன்னுவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Chella

Next Post

அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும்...! மிஸ் பண்ணிடாதீங்க

Wed Dec 21 , 2022
அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை நடைபெற உள்ளது. ‌ சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் நாளை காலை 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக சேவைகள் குறித்து ஆலோசனைகள் அல்லது குறைகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். வாடிக்கையாளர்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அதன் விவரங்களை பாக்கியலட்சுமி, […]

You May Like