2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட 6,400 பணியிடங்களை நிரப்ப ஊழியர் காப்பீட்டு கழகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய பூபேந்திர யாதவ் கூறியுள்ளார். சென்னை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், நாடு முழுவதும் 23 புதிய 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை அமைக்க உள்ளதாகவும், 60 க்கும் மேற்பட்ட மருந்தகங்களை நிறுவியுள்ளதாகவும் கூறினார்.
நாட்டின் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவைகளை எளிதாக அணுகுவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த ஆண்டு ஜனவரி முதல் தினசரி சராசரி 2,153 வெளி நோயாளிகளுடன், 57,6329 பயனாளிகளுக்கு இந்தக் கல்லூரி சேவையை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
அதிக உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை தொடர்ந்து உருவாக்கி வரும் அரசு, இந்தியாவில் மூன்று நகரங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கேத் லேப் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.