fbpx

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர்…! அதிர்ச்சியில் கட்சி தலைமை…!

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார்.

கிரண்குமார் ரெட்டி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து விலகி, 2018-ஆம் ஆண்டு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து தன்னை மறுபடியும் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் தற்போது மீண்டும் தனது விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதால், மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கடிதம் மூலம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கட்சியை விட்டு விலகுவதற்கான காரணங்களை அவர் குறிப்பிடவில்லை.

Vignesh

Next Post

புதுக்கோட்டையில் இன்று உள்ளூர் விடுமுறை...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

Mon Mar 13 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை திருவப்பூரில், புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழாவும், இன்று மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. தேரோட்டம் நடைபெறும் நிலையில் இன்று திருவப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து, கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார். விடுமுறையை […]

You May Like