காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் என்று கூறியுள்ளார்.
கோலாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் 4 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதன் படி அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்’, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000′, பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படும்’. ‘யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ 3,000 மற்றும் டிப்ளமோதாரர்களுக்கு மாதம் ரூ 1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.