டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
யமுனை நதிக்கரையில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் வெள்ளத்தில் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்களை அரசு ஏற்பாடு செய்யும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தில் புத்தகங்கள் மற்றும் பள்ளி சீருடைகளை இழந்த குழந்தைகளுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.