fbpx

10ம் படித்திருக்கிறீர்களா…….? இந்திய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனத்தில் காத்திருக்கிறது……..! உங்களுக்கான வேலை வாய்ப்பு இதை உடனே செய்யுங்கள்…..!

சிலர் 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு படித்துவிட்டு, அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமலோ அல்லது படிக்க முடியாமலோ வேலையின்றி தவிப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு அறிவிப்புதான் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு. இதனை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், நீங்களும் அரசு ஊழியர் தான். அதாவது, 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய பொதுத்துறையான பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்திய அரசு நிறுவனமான இந்த நிறுவனத்தில், உங்களுக்கான வேலை வாய்ப்பு கிடைப்பதால், இது அரசாங்க வேலையாகவே கருதப்படுகிறது.

எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தில் இருக்கின்ற கணினி ஆப்ரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதற்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 9000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த வேலைக்கான தகுதி என்று எடுத்துக் கொண்டால், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்து, அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு 25 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், மும்பையில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றிய அதிகப்படியான தகவல்களுக்கு, www.apprenticeshipindia.gov.in/opportunity என்ற வலைதள பக்கத்தில் சென்று பார்வையிடலாம்.

Next Post

ஒரு பெரிய நடிகர் இப்படி செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை- இசையமைப்பாளர் பரத்வாஜ்

Mon Aug 7 , 2023
குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்த்ததும் சிரிக்கும் பாடி லாங்குவேஜ் கொண்டவர் நடிகர் வடிவேலு. சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கும் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். அந்த வகையில் மாமன்னன் படத்தின் மூலம் அதனையும் நிரூபித்து விட்டார். மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய “மலையில தான் தீப்பிடிக்கிறது ராசா” எனும் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான “குண்டக்க மண்டக்க” படத்தில் வடிவேலு பாடிய “வந்துட்டான்யா” பாடலும் […]

You May Like