நவம்பர் 8 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநில பகுதியில் குலாரிஹாவ் நகரில் ,பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.
பரிசோதனையில் கொலையான பெண்ணானவர் குலாரிஹாவ் பகுதியில் வசிக்கும் ஜோதி என்ற சினேகா என்பது ஊர்ஜிதமாகியது. இதனையடுத்து கொலைச் சம்பவம் பற்றி சினேகாவின் கணவர் பங்கஜ் மவுரியா மற்றும் அவரது நண்பர் துர்ஜன் பாசி ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவி ஜோதியை ஆண் நண்பரின் உதவியுடன் கொலை செய்ததை பங்கஜ் மவுரியா காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இது பற்றி அவர் அளித்த வாக்குமூலத்தில், திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆன நிலையில், போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கம் மனைவிக்கு இருந்தது.
அத்துடன் ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பும் வைத்திருந்தார். இதனை நிறுத்த கூறி பலமுறை சொல்லியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாகவே என் மனைவியை நான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன் மற்றும் அவரது நண்பரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.