fbpx

10, 12-ஆம் வகுப்புகளுக்கு முக்கிய அறிவிப்பு…! அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள்…! மாவட்ட ஆட்சியர் தகவல்

மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாகக் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள், 10, 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தனது செய்தி குறிப்பில்; மொழித் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அகில இந்திய தொழில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித் தேர்வில் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை நிறைவு செய்து உரிய கல்விச் சான்றிதழ்களை இணைத்து, தொழில் பயிற்சி நிலையம், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி, திண்டுக்கல் – 3′ என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வரும் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை..!

Sun Sep 24 , 2023
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், தர்மபுரி, […]

You May Like