fbpx

நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…? மத்திய சுகாதாரத்துறை தகவல்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,395 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,614 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,44,72,241 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,39,00,204 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,090 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,14,27,81,911 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,31,977 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’அம்மாவுக்கு என்னால் நிறைய கஷ்டம்’..!! 10ஆம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு..

Thu Sep 8 , 2022
அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் மனைவி யசோதா வசித்து வருகிறார். இவருக்கு கௌசிகா என்ற 14 வயது மகள் இருந்தார். இவர் பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்த முருகன், […]

You May Like