fbpx

#India Covid: 24 மணி நேரத்தில் மொத்தம் எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு தெரியுமா…? மத்திய அரசு தகவல்..‌

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 19,673 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 45 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 20,408 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 44,019,811 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,33,49,778 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,357 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,04,25,69,509 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,36,029 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read: வாகன ஓட்டிகளே… சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியாக சென்னை ஐஐடி, தமிழக அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி…!

Vignesh

Next Post

யூடியூப் வீடியோ பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவர்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Sun Jul 31 , 2022
12 வயது சிறுவன், யூடியூப் வீடியோவைப் பார்த்து, ஒயின் தயாரித்து, தனது வகுப்புத் தோழர்களுக்கு வழங்கி உள்ளார்.. மதுவை அருந்திய சக மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இச்சம்பவம் கேரளாவின் சிராயின்கீழு பகுதியில் உள்ள முருக்கும்புழா அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. மது அருந்திய சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அரசுப் பள்ளியில் நடந்ததாகவும், […]

You May Like