துர்க்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பால் சிக்கியவர்களை மீட்க இந்தியா சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படையுடன், தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் குழு துருக்கிக்கு இந்தியா அனுப்பி உள்ளது. துருக்கியில் நேற்று 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4,000 க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியாவின் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போர் மற்றும் அகதிகள் நெருக்கடியால் அப்பகுதி முழுவதும் பரவியிருக்கும் உலோகம் மற்றும் காங்கிரீட் கட்டிடங்களில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இந்திய பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உதவிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, துருக்கிய அதிகாரிகள் சர்வதேச உதவியை கோரி வருகின்றன.