fbpx

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…! இந்தியாவிலிருந்து துருக்கி விரையும் தேசிய பேரிடர் மீட்பு குழு…!

துர்க்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பால் சிக்கியவர்களை மீட்க இந்தியா சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படையுடன், தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் குழு துருக்கிக்கு இந்தியா அனுப்பி உள்ளது. துருக்கியில் நேற்று 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4,000 க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியாவின் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போர் மற்றும் அகதிகள் நெருக்கடியால் அப்பகுதி முழுவதும் பரவியிருக்கும் உலோகம் மற்றும் காங்கிரீட் கட்டிடங்களில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இந்திய பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் உதவிகளை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவக் குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன. பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, துருக்கிய அதிகாரிகள் சர்வதேச உதவியை கோரி வருகின்றன.

Vignesh

Next Post

’நான் அந்த மாதிரி படத்துல கூட நடிப்பேன்’..!! நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்..!!

Tue Feb 7 , 2023
கதைக்கு அவசியமா இருந்தா நிர்வாணமாக நடிப்பது எனக்கு பிரச்சனை கிடையாது என்று நடிகை பிந்து மாதவி தெரிவித்திருக்கிறார். நிர்வாணமாக நடிக்கறதுல என்ன தவறு இருக்கிறது? அப்படியொரு வாய்ப்பு கிடைச்சா நான் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்று கூறியிருக்கிறார் நடிகை பிந்து மாதவி. இது கலை தாகமா? பட வாய்ப்பில்லாத காரணத்தால், இயக்குநர்களுக்கு அறைகூவலான்னு எல்லாம் ரசிகர்களே முடிவு பண்ணிக்கோங்க. ஆனா, நடிகை பிந்து மாதவி நிர்வாணமாக நடிக்கவும் தயார்னு சொல்லி […]
’நான் அந்த மாதிரி படத்துல கூட நடிப்பேன்’..!! நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்..!!

You May Like