fbpx

#மதுரை :இறந்த தாயை 3 நாட்கள் வீட்டிலே வைத்திருந்த அவலம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!

மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி உயிரிழந்து விட்டார். இதையடுத்து இறப்பு குறித்து பாலகிருஷ்ணன் மற்றும் மகன்கள் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில், சடலத்தை வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து வந்துள்ளனர்.

இதனை பற்றி அருகில் உள்ளோர் கேட்ட போது ஏதோ சமாளித்து கூறிவிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக சடலத்தை வீட்டிலேயே வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில், மாலதி மீண்டும் மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என்று நினைத்து ஜெபம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதனை கேட்ட காவல்துறையினர் மற்றும் அங்குள்ளோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று சடலத்தை மீட்டு சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். இதில் மருத்துவ படிப்பு படித்த இரண்டு மகன்களும் சேர்ந்து இவ்வாறு செய்தது அப்பகுதியில் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

#கள்ளக்குறிச்சி : மின் கம்பத்தில் மோதிய பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!

Sat Nov 19 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் இயங்கிவரும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பிறகு, 40 மாணவா்களை ஏற்றிக் கொண்டு சங்கராபுரம் வட்ட பகுதியில் உள்ள , லட்சுநாயக்கன்பட்டியை நோக்கி கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்து எதிர்பாராத விதமாக இந்திலி பகுதியில் வந்தபோது, திடீரென அச்சு முறிந்து கட்டுப்பாட்டினை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது மோதி […]

You May Like