மதுரை மாவட்ட பகுதியில் பாலகிருஷ்ணன் – மாலதி என்ற தம்பதி வசித்த வந்துள்ளார். மூத்த மகனான ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். இளைய மகனா சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு பயின்று வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் உடல்நலக்குறைவின் காரணமாக மாலதி கடந்த 8ஆம் திகதி உயிரிழந்து விட்டார். இதையடுத்து இறப்பு குறித்து பாலகிருஷ்ணன் மற்றும் மகன்கள் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில், சடலத்தை வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்து வந்துள்ளனர்.
இதனை பற்றி அருகில் உள்ளோர் கேட்ட போது ஏதோ சமாளித்து கூறிவிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக சடலத்தை வீட்டிலேயே வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்த நிலையில், மாலதி மீண்டும் மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என்று நினைத்து ஜெபம் செய்தது தெரிய வந்துள்ளது.
இதனை கேட்ட காவல்துறையினர் மற்றும் அங்குள்ளோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று சடலத்தை மீட்டு சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். இதில் மருத்துவ படிப்பு படித்த இரண்டு மகன்களும் சேர்ந்து இவ்வாறு செய்தது அப்பகுதியில் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.