fbpx

தூள்…! 90% தள்ளுபடி விலையில் மருந்துகள்… புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்…!

1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு. 90% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கும் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என அறிவித்தார்கள். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.mudhalvarmarundhagam.tn.gov.in முதல்வர் என்ற மருந்தகம் இணையதளம் அமைக்க மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை நேரடியாக விண்ணப்பித்தவர்களில் 340 பேருக்கும், கூட்டுறவுத் துறை மூலமாக விண்ணப்பித்தவர்களில் 500 பேருக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் இருந்தால், அதற்கான சான்றிதழ்களாக சொத்துவரி ரசீது அல்லது குடிநீர்வரி ரசீது அல்லது மின் இணைப்பு ரசீது சமர்ப்பிக்க வேண்டும். வாடகை இடமாக இருந்தால், இடத்துக்கான உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்தப் பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு, அரசு மானியம் ரூ.3.00 இலட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும். மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். இந்த நிலையில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட்ட உள்ளது. 90% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கும் புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

English Summary

Medicines at 90% discount… CM to launch new scheme today

Vignesh

Next Post

சொகுசு காரில் டிப்டாப்பாக சென்று கொள்ளை..!! பள்ளிக்கரணையில் பறிபோன 250 சவரன் நகை..!! 3 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை..!!

Mon Feb 24 , 2025
Gnanasekaran, who has been arrested and imprisoned on a sexual assault charge, has confessed to the police that he stole more than 250 pieces of jewelry in the Pallikaranai area.

You May Like