உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு 16 வயது சிறுமி கயவர்களால் காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷி நகர் பகுதியில், தன்னுடைய பெற்றோர்கள் வேலைக்கு சென்று இருந்த நிலையில், 16 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது.
வீட்டில் தனியாக இருந்ததால், வீட்டில் இருக்கும் சிறு, சிறு வேலைகளை செய்தார். பின்னர் பின்புறம் இருந்த மாட்டு தொழுவத்தில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அப்போது அவருடைய அண்டை வீட்டு இளைஞர் ஒருவர் நாம் இருவரும் ஒரு இடத்திற்கு சென்று வரலாம் வா, என்று அழைத்துள்ளார். அந்த இளைஞர் அந்த சிறுமிக்கு பழக்கமானவர் என்பதால், அவரை நம்பி இந்த சிறுமியும் உடன் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் திடீரென்று அங்கு வந்துள்ளனர். அந்த இளைஞர்களை பார்த்ததும் அந்த சிறுமியை அழைத்துச் சென்றவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு, மூன்று பேரும் இணைந்து அந்த சிறுமியை மிரட்டி, காரில் கடந்து சென்றனர்.
பின்னர் ஓடும் காரிலேயே வைத்து, அந்த சிறுமியை கதற, கதற மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனாலும், அந்த கயவர்களிடமிருந்து தப்பிக்க அந்த சிறுமி எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால் சிறுமி என்பதால் அவரால் அவ்வளவு எளிதில் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. இறுதியாக முடிந்தவரை போராடிப் பார்த்த அந்த சிறுமி, பின்னர் மயக்கம் அடைந்து விட்டார். அதன் பிறகு மீண்டும் அந்த சிறுமியை கடத்திய இடத்திற்கு கொண்டு வந்து மாட்டு தொழுவத்திற்கு அருகில் அவரை வீசிவிட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமி தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி தன்னுடைய தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். அந்த புகாரை அடிப்படையாக கொண்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.