சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் சிக்கந்தர் (38). இவர் திருமங்கலம் பாடி குப்பம் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.மந்திரிப்பது, மாந்திரீகம் செய்வது போன்ற தொழிலை இவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட திருமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து. அவரது உடலை நீட்டு உபயோக பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் அவர்கள் நடத்திய விசாரணையில் சிக்கந்தர் தன்னுடைய நண்பர்கள் விக்கி( 24) குற்ற வழக்கு பின்னணி கொண்ட புருஷோத்தமன் உள்ளிட்ட அவருடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் கடந்த ஒரு வார காலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்தது என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் காரணமாக, சிக்கந்தர் கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று பிற்பகல் இருவரும் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.