வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் மணி – முனியம்மா என்ற தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவர்களின் உறவினர்களான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.
ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக பெண் வீட்டிற்கு கணவர் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று பார்ப்பதற்குள் , லட்சுமியின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர்.
திருமணம் ஆன நாளிலிருந்தே லட்சுமியை அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் நேற்று லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதனை தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.