சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்( 20) பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் இவர் படித்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த ஹரிஷ்(16) என்ற மாணவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவருடன் மேலும் 4 பேர் சேர்ந்து திருவொற்றியூர் தாங்கள் சுதந்திரபுரம் கடற்கரை பரப்பில் நேற்று மதியம் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.
அப்போது ஒரு ராட்சதலை எழுந்தது. அந்த அலையானது 7 பேரையும் உள்ளே இழுத்துச் சென்றது. இதில் 3️ பேர் தப்பி வெளியே வந்த நிலையில் ஸ்ரீகாந்த் ஹரிஷ் மற்றும் மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு உள்ளிட்டோர் கடலில் மூழ்கினர்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து 2 மாணவர்களையும் வைத்து வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஷ் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான மற்றொரு மாணவர் சந்துருவை தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் தேடி வருகிறார்கள்.