சமீப காலமாக கோவையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வர தொடங்கியிருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு கலாச்சாரம் கோவையில் தலை தூக்கிய நிலையில், தற்போது தொடர் கொலைகள் நடைபெற்று வருகிறது.
ஆகவே கோயமுத்தூரில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்றதால் ரவுடிசத்தில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றன. முன்னதாக கோவையில் சென்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நீதிமன்ற வளாகத்தின் அருகே தொடர்ச்சியாக 2 கொலை சம்பவம் நடந்தது. ஆகவே கோயமுத்தூர் மாநகர் முழுவதும் வாகன சோதனையை நடத்தி காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் இருப்பவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்.
அத்துடன் கோயம்புத்தூரில் சிறப்பு வாகன பரிசோதனை மற்றும் விடுதி பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. மாநகரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்களை பற்றி கணக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது இதுவரையில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அத்துடன் 64 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது, அதோடு மட்டுமல்லாமல் 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. கைது நடவடிக்கை மேலும் தொடரும் எனவும் மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. கோயமுத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்ததை தொடர்ந்து, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.