fbpx

பியூட்டி பார்லருக்கு வந்த இளம் பெண்ணுடன் வாண்ட்டடாக வம்பிழுத்து சண்டைப்போட்ட 40 வயது பெண்…..! கோவையில் ரகளை…..!

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பெண்கள் அழகு நிலையம் முன்பு செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்திற்கு நேற்று முன்தினம் 23 வயது மதிக்க ஒரு இளம் பெண் ஐ ப்ரோ சரி செய்வதற்காக வந்துள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்வதற்காக வருகை தந்துள்ளார். அப்போது 23 வயது இளம்பெண் அங்குள்ள ஒரு இருக்கையில் முன்பக்கமாக சென்று அமர்ந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 40 வயது பெண் சங்கீதா நீ எதற்காக இங்கு வந்தாய்? என்று அந்த இளம் பெண்ணுடன் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவருடைய முடியை பிடித்து இழுத்து அவர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். அத்துடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த இளம் பெண் கோவை ஆர். எஸ் புரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 40 வயது பெண் அந்த 23 வயது இளம் பெண் மீது தாக்குதல் நடத்தும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Post

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஓட்டலில் ரூம் போட்ட இளைஞர்..!! பதறியடித்து ஓடிவந்த பெற்றோர்..!! நடந்தது என்ன..?

Tue May 9 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் எனக்கூறிவிட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார். ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, […]

You May Like