தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர்.
ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் தமிழகத்தில் என்று மது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற பாலியல் குற்றங்கள் முதல் கோர விபத்துக்கள் வரையில் முடிவுக்கு வரும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த விதத்தில் சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்த புகாரின் பேரில் வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்