தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு விவரங்களை அதற்கான செயலியில் இந்த மாதம் இறுதிக்கு பதியேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்சமயம் முறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில், இதன் தொடர்ச்சியாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
பள்ளிகளிடம் அனைத்து விவரங்களையும் மே மாதம் இறுதிக்குள் பதிவேற்றம் செய்து முடித்திருக்க வேண்டும் என்றும், கோடை விடுமுறை தினங்களில் மீதமுள்ள பள்ளிகளை பார்வையிட்டு பதிவேற்றம் செய்யவும் பொறியாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.