உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் மாவட்டம் சொனவ்லி கோட்வாலி பகுதியில் உள்ள எட்டு வயது சிறுமி நேற்று காலை அந்த கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த கிராமத்தில் இருக்கும் 55 வயதான ஷம்சுல் ஹக்யூ அந்த சிறுமியிடம் பணம் தருவதாக சொல்லி அந்த கிராமத்தில் உள்ள மூடப்பட்டிருந்த இஸ்லாமிய மதப்பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த சிறுமியை ஷல்சுல் ஹக்யூ பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதை தொடர்ந்து, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த அந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயதான ஷல்சுல் ஹக்யூவை இன்று கைது செய்தனர்.