ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறவினர் திருமகன் கடந்த 4ம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார்.இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வெளியிட்ட கட்சி கரடியை நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு போட்டிக்கான பணிகளில் ஈடுபட்டிருக்க நாங்களும் போட்டியிடுவோம் என்று பன்னீர்செல்வம் தரப்பும் தெரிவித்து வருகிறது. இதனை அடுத்து கூட்டணி கட்சியினர் இடையே அதிமுகவின் இரு தரப்பினரும் ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று அண்ணாமலையை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பினரும் சந்தித்து ஆதரவு கேட்டனர். இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த பன்னீர்செல்வம் தேச நலன் தொடர்பாக உரையாடினோம். சந்திப்பு தனக்கு திருப்திகரமாக இருந்தது என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில் தான் மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அண்ணனை இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதா அல்லது போட்டியிடுவதா என்பது தொடர்பாக இதுவரையில் எங்கள் தரப்பில் எந்த விதமான முடிவும் மேற்கொள்ளப்படவில்லை.
தேசிய தலைமை இது தொடர்பான முடிவை தெரிவித்த பின்னர் நாளை நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.