fbpx

சென்னையில் பயங்கரம்…..! ஆட்டோ ஓட்டுனரை கொலை செய்த கார் ஓட்டுநர் அதிரடி கைது…..!

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பாலு(50). இவருடைய அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல்(30) இவர் கார் ஓட்டுனராக இருக்கிறார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

எத்தகைய நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மது போதையில் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட தனிகைவேல் இரும்பு கம்பியால் ஆட்டோ ஓட்டுநர் பாலுவை பலமாக தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகவே செம்மஞ்சேரி காவல்துறையினர் தணிகைவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

வரலாறு புத்தகத்தில் முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயங்கள் நீக்கப்படவில்லை.. NCERT இயக்குனர் விளக்கம்..

Wed Apr 5 , 2023
12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாய பேரரசு தொடர்பான அத்தியாயங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் நீக்கியதாக தகவல் வெளியானது.. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12-ம் வகுப்பு வரலாறு பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி முகலாய பேரரசு தொடர்பான அத்தியாசங்களை நீக்கி உள்ளது.. இது CBSE, மற்றும் NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பிற மாநில வாரியங்கள் உட்பட அனைத்து வாரியங்களின் […]

You May Like