எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஆனாலும் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவார வேண்டும் என்று தொடர்ந்து பன்னீர்செல்வம் முயற்சித்து வந்தார். ஆனாலும் அவருடைய முயற்சிக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. தேர்தல் ஆணையம் முதல் கொண்டு பன்னீர் செல்வத்திற்கு எதிராகவே இருக்கிறது.
இந்த நிலையில், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ள பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்று பன்னீர்செல்வத்தை தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்து வருகிறார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் மறுபடியும் அதிமுகவின் லட்டர் பேடை பயன்படுத்தி இருக்கிறார். பன்னீர்செல்வம் அதிமுகவின் லெட்டர் பேடில் கழக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மக்களுக்கு மே தின வாழ்த்துக்களை அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த செயல் எடப்பாடி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.