fbpx

மாணவிக்கு பாலியல் தொல்லை…..! கல்லூரி முதல்வர் அதிரடி கைது……!

இளம் பெண்களுக்கு தற்போது இருக்கின்ற சமுதாயத்தில் தன்னுடைய சொந்த வீட்டை தவிர்த்து வேறு எங்குமே பாதுகாப்பு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அவர்களை அனுப்புவது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தான். ஆனால் அங்கேயும் ஒரு சில நபர்கள் செய்யும் செயலால் மாணவிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக காவல்துறையில் புகார் வழங்கியிருக்கிறார். இதை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமை நேற்று கைது செய்தனர்.

முதல்வர் ஆபிரகாம் தொந்தரவு வழங்கியதால் பாதிக்கப்பட்ட 23 வயது மாணவி கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தி வந்த காவல்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கல்லூரி முதல்வர் ஆபிரகாமின் இல்லத்திற்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.

Next Post

அந்தரங்க பகுதியில் பிளாஸ்டிக் பைப்பை உருக்கி ஊற்றிய கொடூரம்..!! நடந்தது என்ன..? பதைபதைக்கும் சம்பவம்..!!

Sun Mar 12 , 2023
மது போதைக்கு அடிமையானவர்களை போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்களில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், பல போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் கொலை செய்யும் மையங்களாகவே இயங்கி வருகின்றன. அடித்து உதைத்து சித்திரவதைகளை செய்து பலரை கொலை செய்து விட்டார்கள். இதனால் போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் என்றாலே கொலை செய்யப்படும் இடமாகவே அதிர்ச்சியைத் தருகின்றன. அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் மேசானா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்திக் சுதார் என்கிற வாலிபரை படான் […]
அந்தரங்க பகுதியில் பிளாஸ்டிக் பைப்பை உருக்கி ஊற்றிய கொடூரம்..!! நடந்தது என்ன..? பதைபதைக்கும் சம்பவம்..!!

You May Like