fbpx

நடுரோட்டில் கல்லூரி மாணவி படுகொலை….! காரணம் என்ன….?

குழந்தைகள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று தான் வருகின்றனர்.

பொதுவாக பெண்கள் நடு இரவில் சுதந்திரமாக நடைபெறும் நாள் எப்போது வருகிறதோ அப்போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை பெற்றதாக அர்த்தம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.

ஆனால் தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் பகலிலேயே பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத கொடுமை நடைபெற்று வருகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரு சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை வழிமறித்து கண்ணிமைக்கும் சமயத்தில் சரமாரியாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த இளம் பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் அதே இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பழைய பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொலையின் பின்னணியில் காதல் விவகாரம் இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தீவிர படுத்தியிருக்கின்றனர்.அத்துடன் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Post

படுக்கையில் சிறுநீர் கழித்த காதலன் ஆத்திரமடைந்த காதலி….! இறுதியில் காதலனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை….!

Thu Jan 19 , 2023
முன்பெல்லாம் காதலிக்கும் பெண்கள் ஆண்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.ஆனால் தற்சமயம் அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. தற்போது காதலிக்கும் ஆண்கள் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் போல தெரிகிறது. அமெரிக்கா நாட்டின் லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசித்து வருபவர் ப்ரியானா லாகோஸ்ட் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த […]

You May Like