fbpx

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் நோய் தொற்று பரவல்……! அச்சத்தில் மக்கள்….!

தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து இருக்கின்ற நிலையில், சிகிச்சையில் இருப்பவரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து இருந்த சூழ்நிலையில், தற்சமயம் அது மறுபடியும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

நேற்று முன்தினம் சுமார் 39 பேருக்கு புதிதாக நோய் தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக சென்னை மற்றும் கோவையில் தலா 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நோய் தொற்று தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Next Post

’உன்னால சமையல் கூட சீக்கிரம் பண்ண முடியாதா’..? மாமியார் திட்டியதால் விபரீத முடிவெடுத்த மருமகள்..!!

Mon Mar 13 , 2023
திருப்பத்தூர் அருகே மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (27). இவர், கோவை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஆதிலட்சுமி (22) என்பவருடன் காதல் ஏற்பட்டு, திருமணமும் செய்து கொண்டார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதிலட்சுமியின் பெற்றோர், பின்னர் சமாதானம் அடைந்து 20 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை மருமகனுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். திருமணம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், […]
’உன்னால சமையல் கூட சீக்கிரம் பண்ண முடியாதா’..? மாமியார் திட்டியதால் விபரீத முடிவெடுத்த மருமகள்..!!

You May Like